மதுபான கடையில் குடிமகன்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியர்கள்.. .ஆந்திராவில்
அமராவதி: ஆந்திராவில் மதுபான கடைகளில் குடிமகன்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஆசிரியர்களும் களம் இறக்கிவிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன.
மொத்தம் 40 நாட்களாக அனைத்து மதுபான கடைகளும் ஒரே நேரத்தில் மூடப்பட்டன. இதனை அடிப்படையாக வைத்தே பூரண மதுவிலக்கு எனும் நல்ல நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்

லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள் தளர்வு
இந்நிலையில் லாக்டவுன் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அத்துடன் பல கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இதனால் மாநிலங்கள் மூடியிருந்த மதுக்கடைகளை திறந்துவிட்டன. அவ்வளவுதான்.. குடிமகன்கள் வெறித்தனமாக மதுபான கடைகளில் குவிந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மதுபான கடையிலும் கடந்த காலங்களைவிட அமோகமாக மதுவிற்பனையாகி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு
தமிழகத்திலும் இன்றுமுதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு சரக்குகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதிதுத்துதான் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால் இந்த நிபந்தனைகள், சமூக விலகல் போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் குடிமகன்கள் மதுகடைகள் முன்பு கும்மியடித்துக் கொண்டிருக்கின்றனர். போலீசாரும் விழிபிதுங்க வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ஆந்திராவில் அலப்பறை
இதனிடையே ஆந்திராவில் மதுபான கடைகள் முன்பாக திரண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனையடுத்து போலீசாருடன் இணைந்து குடிமகன்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆசிரியர்களும் களத்தில் இறங்க அரசு உத்தரவிடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் போலீசாருடன் இணைந்து ஆசிரியர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் போராட்டம்
இந்த நடவடிக்கை ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. அரசின் செயலால் கொந்தளித்துப் போன ஆசிரியர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் வேறுவழியே இல்லாமல் ஆசிரியர்களை மதுகடை கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருந்து விடுவித்து ஆந்திரா அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications