கோவில் விழாவில் பங்கேற்ற யானைக்கு மதம் பிடித்தது... வாகனங்கள் துவம்சம்
பாலக்காடு: கேரளமாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கோங்காட் என்ற இடத்தில் கோவில் விழாவில் பங்கேற்ற யானை ஒன்றுக்கு மதம் பிடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய அந்த யானை அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை துவம்சம் செய்தது. ஆட்டோக்களை கோபத்துடன் தூக்கி வீசியதை, பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாட்டம் ஒத்தப்பாலம் அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று மாலை, 4 மணியளவில் நடந்த யானைகளின் அணிவகுப்பின் போது, ஒருயானை, திடீரென மிரண்டது. வெறித்தனமாக அங்கும் இங்கும் ஒடியது. இதைக்கண்ட மக்கள் மிரண்டு அருகில் இருந்த இடங்களில் பதுங்கினர்.
{ventuno}
கோபம் கொண்ட யானை சாலை ஓரம் நின்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களை தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது. அப்போது யானை மீது 2 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இருவரும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். அந்த நேரத்தில் மற்ற 10 யானைகளும் பத்திரமாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
வெறித்தனமாக ஓடிய யானை, ஒரு இருசக்கர வாகனத்தை துாக்கி வீசி நொறுக்கியது. தும்பிக்கையில் கிடைத்த ஆட்டோக்களை தூக்கி எறிந்தது. யானை நடத்திய இந்த தாக்குதலில் 27 வாகனங்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவர் தலைமையிலான படையினர், மயக்க ஊசிப்போட்டு மதம் பிடித்த யானையை அமைதிப்படுத்தினர். 4 மணிநேரம் கழித்தே அந்த யானை இயல்பு நிலைக்கு திரும்பியது. கோவில் விழாவில் பங்கேற்ற யானை திடீரென ஆவேசம் வந்து வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications