டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் பதவியேற்பு.. விழாவில் கேஜ்ரிவால் பங்கேற்பு
டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அனில் பைஜாலுக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி துணை நிலை ஆளுநராக மூன்றரை ஆண்டுகாலம் இருந்தவர் நஜீப் ஜங். ஆம் ஆத்மி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த அவர் 22ம் தேதி திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய துணை நிலை ஆளுநரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தியது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் பைஜால் (70) அந்த பொறுப்புக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து இன்று டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அனில் பைஜாலுக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்த நிகழ்வில் பங்கேற்றார். டெல்லியின் 21வது துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆவார்.
1969ம் ஆண்டு 'பேட்ச்' ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனில் பைஜால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய உள்துறை செயலாளராக இருந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் அனில் பைஜால் முக்கிய பங்காற்றியவர். 2006ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.












Click it and Unblock the Notifications