மோடிக்கு தான் பிரதமர் என்ற 'ஈகோ'... அன்னா ஹசாரே பொளேர்!
நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை : மக்கள் பிரச்னைக்காக தான் இதுவரை எழுதிய 30 கடிதங்களில் ஒன்றிற்கு கூட இந்த 3 ஆண்டுகளில் பிரதமர் பதில் அளிக்கவில்லை என்றும் அவருக்கு தான் பிரதமர் என்ற அகந்தையே அதிகம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் மோடிக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருப்பதாக கூறினார்.

"மக்கள் பிரச்னைகள் தொடர்பாக நான் இதுவரை பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 ஆண்டுகளில் 30 கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால் அவர் ஒரு கடிதத்திற்குக் கூட பதில் எழுதவில்லை, ஏனெனில் அவருக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருக்கிறது" என்றார்.
மேலும் மார்ச் 23ம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஹசாரே அறிவித்தார். இந்த போராட்டத்திற்கான ஆதரவு திரட்டும் பயணத்தை நேற்றைய பொதுக்கூட்டத்தில் இருந்து சாரே தொடங்கியுள்ளார்.
மார்ச் 23ம் தேதி நடக்கப் போகும் போராட்டமானது இதுவரை டெல்லி கண்டிராத போராட்டமாக இருக்கும். என்னுடைய பொதுக்கூட்டம், போராட்டங்கள் மூலம் வாக்காளர்களை ஈர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. லோக்பால் மசோதாவிற்காக மக்கள் எத்தகைய அளவில் கூடி ஆதரவளித்தனரோ அதே போன்று விவசாயிகள் பிரச்னைக்காக நடத்தப்படும் கூட்டத்திற்கும் தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என்று ஹசாரே கூறியுள்ளார்.
லோக்பால் மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும், லோக்அயுக்தா நிறுவ வேண்டும், விவசாசிகளுக்கு ரூ. 5 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் நிறுத்தியே தன்னுடைய போராட்டம் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications