சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: அன்னா ஹசாரே
மும்பை: கிராம பஞ்சாயத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவேன் என மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே, மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்யும் விவகாரம் போன்றவற்றில் கொண்டு வரப்பட்ட சட்டங்களை மராட்டிய அரசு முறையாக அமல்படுத்தவில்லை. கிராம வளர்ச்சி மூலமே நாட்டு வளர்ச்சியை காண முடியும் என்று மகாத்மா காந்தி கூறினார். இதனால் சட்டசபை, நாடாளுமன்றத்தை விட கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அரசு பணியாளர்கள் இடமாற்ற பிரச்சினையில் 2006ம் ஆண்டு நீண்ட போராட்டத்துக்கு பிறகு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி அவசியமின்றி அரசு பணியாளர்களை 3 ஆண்டுகள் வரை இடமாற்றம் செய்ய முடியாது. ஆனால் அந்த சட்டத்தின்படி தற்போது யாரும் நடக்கவில்லை.அமைச்சர்களின் விருப்பப்படி இடமாற்றம் நடக்கிறது.
சிறந்த சட்டங்கள் நடைமுறையில் இருந்தும் அவற்றை அமல்படுத்த அரசு தவறி வருகிறது. சட்டங்களை முறையாக அமல்படுத்தாததால் பொதுமக்கள் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு லஞ்சம், ஊழல் மலிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட சட்டங்களை முறையாக அமல்படுத்தும்படி உங்களது நினைவுக்கு கொண்டு வருகிறேன். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய மக்கள் போராட்டம் நடைபெறும்' என இவ்வாறு தனது கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications