Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ரிசல்ட் வரக்கூடாது! அரசியல் கட்சிகளின் விநோத கோரிக்கை.. மிசோரமில் சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியை ஞாயிற்றுக்கிழமை அல்லாத தேதிகளில் வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை எழுப்பியிருந்தன. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் புறக்கணித்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதியன்று நடைபெற்றது. இம்மாநிலத்தில் பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

Announcement that Mizoram election results will be released on Sunday 3rd December as scheduled

அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது.

ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில் பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அம்மாநில அரசியல் கட்சிகள் சில ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றன. ஏனெனில் இந்த மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 85 சதவிகிதமாக இருக்கின்றனர்.

எனவே வாக்கு எண்ணிக்கை தேதி ஞாயிற்றுக்கிழமையாக வருவதால் அதனை மாற்ற வேண்டும் என ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்), பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தேவாலயம், மாணவர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக்களும் கோரிக்கை வைத்திருந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இது குறித்து பேசிய மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரி மதுப் வியாஸ், "ஞாயிற்றுக்கிழமை தேவாலய நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், அன்றைய தேதியில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டால் பிரச்னைகள் எழ வாய்ப்பிருப்பதாக சில அரசியல் கட்சிகளும், குழுக்களும் கூறியிருந்தன. மட்டுமல்லாது வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை நடத்தினேன். ஆனால் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் கீழ் நேரடியாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த பணியால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது" என்று கூறியுள்ளார். எனவே மிசோரம் தேர்தல் முடிவுகள் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் 3ம் தேதியன்று வெளியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+