மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு பலாத்காரம்: 6 வயது சிறுமியை சீரழித்த 55 வயது ஆசாமி கைது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 55 வயது காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு மிட்னாபூர் மாவட்டம் பெல்டா பகுதியில் இன்று தனியாக இருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பிஸ்துபடா சிங் (55) என்பவர் நைசாகப் பேசி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற, அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் பிஸ்துபடா சிங்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மிட்னாபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் உயர்சாதி வாலிபரை காதலித்த இளம்பெண்ணை பஞ்சாயத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பலாத்காரம் செய்தது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், 6வயது சிறுமியை 55 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications