2 நாளில் மூன்று எம்எல்ஏக்கள்....கட்சியில் இருந்து விலகல்... அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 நாட்களில் 3 எம்எல்ஏக்கள் விலகி உள்ளது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொடர்ச்சியாக தலைவர்கள் நிலவி வருவது அங்கு ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ள பாஜகவுக்கு புதிய தெம்பை கொடுத்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அவர் முதலில் அவர் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி கட்சியில் இருந்தும் விலகினார். கட்சியிலும், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் மிகவும் செல்வாக்கு மிக்க சுவேந்து அதிகாரி பதவி விலகி உள்ளது மம்தா பானர்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் மாநில எம்எல்ஏ ஜிதேந்திர திவாரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இன்று எம்எல்ஏ சில்பத்ரா தத்தா என்பவரும் கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
கூட்டணி குறித்தும், பிரசார திட்டங்கள் குறித்தும் முடிவெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் மம்தா பானர்ஜியுடனும்,கருத்து வேறுபாடு காரணமாக எம்எல்ஏக்கள், மாவட்ட அளவிலான கட்சி தலைவர்கள் பதவி விலகி வருவது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது எனஉறுதியாக கூறலாம்.
தொடர்ந்து கட்சியில் இருந்து முத்த தலைவர்கள் விலகி வரும் நிலையில் மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருகிற தேர்தலில் மேற்கு வங்கத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற முடிவில் பாஜக உள்ளது. தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி வருவது பாஜகவுக்கு புதிய தெம்பை கொடுத்து உள்ளது.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications