பதன்கோட்: பாதுகாப்பு தரப்பு தவறுகள் குறித்து நாட்டு மக்களுக்கு மோடி விளக்க ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு தரப்பில் நிகழ்ந்த தவறுகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஏ.கே. ஆண்டனி பேசியதாவது:
பதன்கோட்டில் தாக்குதல் நடைபெற்றத்தில் மிக மோசமான வகையில் பாதுகாப்பு தரப்பில் தவறுகள் இருந்துள்ளன. இதற்காக இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி சென்ற பிறகுதான் இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருக்க கூடாது.
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு என கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வருகைக்குப் பின்னர் நிலைமை மாறிவிட்டது. இப்போது காங்கிரஸ் உற்சாகமடைந்துள்ளது.
இவ்வாறு ஏ.கே. ஆண்டனி கூறினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications