ஆந்திரா பேருந்துவிபத்து: அறிக்கை தாக்கல் செய்ய கிரண்குமார்ரெட்டி உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறையினருக்கு அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்கர் வெடித்தில் தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் 44 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் வனபார்த்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டது. உடல்கள் அனைத்தும் முற்றிலும் கருகிய நிலையில் இருப்பதால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கர்நூல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சம்பவ இடத்துக்கு மெகபூப்நகர் மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.தடயவியல் அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications