தொண்டர்கள், உறவினர்கள் கூட்டம்... இடநெருக்கடியால் அரசு பங்களாவிற்கு செல்கிறார் ஆந்திர முதல்வர்
ஹைதராபாத்: தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு பங்களாவில் குடியேற முடிவெடுத்துள்ளாராம்.
ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் 6 ஆயிரம் சதுரஅடியில் 3 படுக்கை அறைகள் கொண்ட சொந்த வீடு உள்ளது. முன்னர் 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தபோதும், 9 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதிலும் அவர் அரசு பங்களாவிற்குச் செல்லவில்லை. தனது சொந்த வீட்டிலேயே குடியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரைக் காண தொண்டர்கள் அதிகளவில் வருகின்றனர். இதற்கிடையே கர்ப்பமாக உள்ள அவரது மருமகளைப் பார்க்கவும் ஏராளமான உறவினர்கள் வீட்டிற்கு வருகின்றனர்.
இதனால், எப்போதும் அவர் வீட்டில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, கூட்டத்தைக் குறைக்கும் வகையில் தொண்டர்களை லேக்வியூவில் உள்ள தனது அமைச்சகம் செயல்படும் அரசு பங்களாவில் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.
ஆனபோதும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தனது வீட்டை விஸ்தரித்துக் கட்ட திட்டமிட்டுள்ளாராம் சந்திரபாபு நாயுடு. 10 படுக்கை அறைகள், 4 வரவேற்பு அறை, வீடியோ காம்பரன்சிங்ஹால், வெளி நாட்டு விருந்தினர்களை சந்திக்க தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க தனி அறை, பார்வையாளர்கள் காத்திருக்க கூடம், விசாலமான சமையல் அறை போன்ற வசதிகளுடன் கூடிய புதிய வீடு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரபாபு நாயுடுவின் இந்த கனவு இல்லத்தை ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்க பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது.
கட்டுமான பணி முடிவடையும் வரை லேக்வியூவில் உள்ள தனது அமைச்சக அலுவலக பங்களாவில் குடியேற சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு உள்ளார். இதனால், அங்குள்ள முதலமைச்சர் அலுவலகம் தலைமை செயலக கட்டிடத்துக்கு மாறுகிறது.
இதன்படி, லேக்வியூ பங்களாவை சந்திரபாபு நாயுடுவின் மனைவி, மகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, அதில் சில மாற்றங்களை செய்ய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு புதிய வீட்டுக்கு குடியேறுவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, வீட்டை மாற்றாமல் கூடுதலாக சில அறைகள் மற்றும் வரவேற்பு அறைகளை மட்டும் கட்டி சொந்த வீட்டிலேயே குடியிருக்கலாம் என்ற யோசனையிலும் சந்திரபாபு நாயுடு இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எது நிஜமாகப் போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications