போயிங் நிறுவனத்திடமிருந்து இரு வகை நவீன ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்திய விமானப்படை!
டெல்லி: பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடமிருந்து இருவகை நவீன ஹெலிகாப்டர்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதை அந்த நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஏஹெச்-64 இ அபச்சே வகை ஹெலிகாப்டர் மற்றும் சிஹெச்-47எப் சினூக் வகை ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
அபச்சே வகை ஹெலிகாப்டர்கள் மொத்தம் 22 மற்றும் சினூக் வகை ஹெலிகாப்டர்கள் 15 முதல்கட்டமாக கொள்முதல் செய்யப்பட உள்ளது.

போர் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் இந்த இரு வகை ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்த முடியும். அபச்சே வகை ஹெலிகாப்டர்களை வாங்கும் உலகின் 14வது நாடு இந்தியா. சினூக் வகை ஹெலிகாப்டர்களை வாங்கும் 19வது நாடு இந்தியாவாகும்.
இந்த தகவலை உறுதி செய்த போயிங் நிறுவனத்துக்கான, இந்திய தலைவர் பிரத்யுஷ் குமார், "இந்தியாவுடனான நெருக்கத்தை இந்த ஒப்பந்தம் நெருக்கமடையச் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், சினூக் ஹெலிகாப்டரின் சில உபகரணங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மற்றொரு வகை ஹெலிகாப்டர் உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது குறித்து சக நிறுவனங்கள் சிலவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.
இந்த இருவகை ஹெலிகாப்டர்களுமே, நவீன வகையை சேர்ந்தவை. பல்முனை தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது, அபச்சே வகை ஹெலிகாப்டர்கள். அமெரிக்க ராணுவத்திலும் இந்த வகை ஹெலிகாப்டர்கள் பயன்பாடு உள்ளது.
சினூக் பல அடி உயரத்தில் பறக்க கூடியது. இந்திய மலைப்பகுதிகளுக்கு ஏற்றது. இதுவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்தான்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications