அடித்து தூக்கும் ஆப்பிள் நிறுவனம்.. இந்தியாவில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்போகிறது
சென்னை: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும், நேரடியாகவும், மறைமுகமாகவும், 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்தியா? சீனாவிலிருந்து மாற்றியதன் காரணமாக இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலைகள் விரிவடைந்து வருகின்றன. இதன் மூலம் இந்தியாவில் 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 16 உற்பத்தி: ஆப்பிள் தனது கூட்டாளி நிறுவனமான Foxconn மூலம் இந்தியாவில் iPhone 16 Pro மற்றும் Pro Max மாடல்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் இந்த உற்பத்தி தொடங்க உள்ளது.
பெண்களுக்கு அதிக வாய்ப்புகள்: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளில் 70 சதவீதம் பேர் பெண்கள்தானாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் iPhone 16 சீரிசில் பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களும் பெண்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் iPhone வெளியீட்டு நிகழ்வு: செப்டம்பர் 9 அன்று iPhone 16 சீரிஸ் வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் iPhone 16 இன் நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்தியாவில் ஆப்பிளின் வளர்ச்சி: ஆப்பிள் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருவது, இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.












Click it and Unblock the Notifications