இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!
டெல்லி: உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் டெல்லியில் காலமான, இந்திய விமானப் படை முன்னாள் தளபதி, மார்ஷல் அர்ஜன் சிங் (98), உடல் தகனம் இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
இதையொட்டி டெல்லியில், அனைத்து அரசு கட்டடங்களிலும், தேசிய கொடி, அரைக்கம்பத்தில் பறக்க விடப்படப்பட்டது.

இதனிடையே இன்று அர்ஜன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பாதுாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அர்ஜன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
கடந்த, 1965ல் பாகிஸ்தானுடனான போரில், இந்திய விமானப்படைக்கு தலைமை தாங்கி வெற்றி தேடித் தந்தவர், மார்ஷல், அர்ஜன் சிங். இதனால் உலகம் முழுக்க இவரது வீர, தீரச் செயல்கள் பிரபலமானது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், டெல்லி ராணுவ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications