ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் 22 வயது கேப்டன் பவன்குமார் மரணம்
காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போராடுகையில் 22 வயதான ராணுவ வீரர் கேப்டன் பவன் குமார் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாம்போர் என்ற நகரில் சனிக்கிழமை மாலை தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் உள்ளூர்வாசி ஒருவரும் குண்டு பாய்ந்து பலியானார்.

இதையடுத்து தீவிரவாதிகள் அங்கு உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்திற்குள் புகுந்தனர். அப்போது அந்த கட்டிடத்தில் 100 மாணவர்கள், 50 பயிற்சியாளர்கள் இருந்தனர்.
பாதுகாப்பு படையினர் அந்த கட்டிடத்தில் இருந்த மாணவர்கள், பயிற்சியாளர்களை பத்திரமாக மீட்டனர். கட்டிடத்திற்குள் எத்தனை தீவிரவாதிகள் உள்ளனர் என்பது தெரியவில்லை. நேற்று மாலையில் இருந்து கட்டிடத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் கேப்டன் பவன் குமார்(22) மீது குண்டு பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
அவரது உடல் ஹரியானா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ஜிந்த் நகருக்கு நாளை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் உடலை இன்று அனுப்பி வைக்க முடியவில்லை.
ராணுவ தினத்தன்று பிறந்து நாட்டிற்காக இறந்த தனது மகனை நினைத்து பெருமைப்படுவதாக பவன் குமாரின் தந்தை ராஜ்பீர் சிங் தெரிவித்துள்ளார். ஒரு மகனை பெற்றேன், அவரையும் நாட்டிற்காக கொடுத்துவிட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த ஆபரேஷனில் காயம் அடைந்த பவன் அதை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த ஆபரேஷன்களில் கலந்து கொண்டார் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications