ஊடுருவலை தடுக்க எல்லை பகுதியில் ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள்: ராணுவம் திட்டம்
டெல்லி: எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ரிமோட் மூலம் இயங்கும் எந்திர துப்பாக்கிகளை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க ரிமோட் கன்ட்ரோல் மெஷின் கன்கள் அதாவது ரிமோட் மூலம் இயங்கும் எந்திர துப்பாக்கிகளை இந்திய ராணுவத்தினர் பயன்படுத்த உள்ளனர். ஜம்மு ஹில்ஸ் பகுதியை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பிரிக்கும் பிர் பஞ்சால் தொடர் பகுதியில் இந்த ரிமோட் கன்ட்ரோல் எந்திர துப்பாக்கிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அக்னூர் செக்டரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் மாதிரி சப்-மெஷின் கன்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோதனையில் இந்த வகை துப்பாக்கிகள் ராணுவ வீரர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இன்ப்ரா ரெட் சென்சார்கள் அடங்கிய எந்திர துப்பாக்கியை வைத்துவிடுவார்கள். அந்த பகுதியில் 80 மீட்டர் தூரம் வரை ஏதாவது நடமாட்டம் தெரிந்தால் சென்சார்கள் அதை பங்கரில் மேப்பிங் சாப்ட்வேரை கண்காணிக்கும் வீரர்களுக்கு தெரிவிக்கும்.
அவர்கள் நடமாட்டத்தால் அசுறுத்தல் ஏற்படும் என்று நினைத்தால் ரிமோட் பட்டனை அழுத்தினால் போதும் துப்பாக்கி சுட்டுவிடும். தற்போது இலகு ரக எந்திர துப்பாக்கிகளை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் எந்திர துப்பாக்கிகளை இன்னும் இரண்டு மாதங்களில் ஊடுருவல் அதிகம் உள்ள இடங்களில் வைக்க உள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications