For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ வீரர் உடலை சிதைத்த பாக் பயங்கரவாதிகளை பழிவாங்குவோம்: மத்திய அமைச்சர்கள் உறுதி

இந்திய ராணுவ வீரர் உடலை சிதைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பழிவாங்குவோம் என மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி இந்திய ராணுவ வீரரை கொன்று அவரது உடலை கொடூரமாக சிதைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பழிவாங்குவோம் என மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு உறுதி அளித்துள்ளனர்.

Army giving befitting reply to Pak firing, says Rajnath Singh

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையான குப்வாராவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவரை உயிரோடு பிடித்து கொடூரமாக கொலை செய்த பயங்கரவாதிகள் அவரது உடலையும் சிதைத்து வெறியாட்டம் போட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்த வெறிச்செயலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தேசம் இன்று மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட ராணுவ வீரர்களே காரணம்... இதுபோன்ற கோழைத்தனமாக செயல்களைக் கண்டு நமது நாடு தலைவணங்காது என கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், பாகிஸ்தான் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உணரவில்லை. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மக்களை அந்த பயங்கரவாதமே விழுங்கிவிடும் என்பதை பாகிஸ்தான் உணருகிறதா என்பது தெரியவில்லை.

English summary
Union Home Minister Rajnath Singh assured the nation that security forces were giving befitting reply to firing from across border and that the country will not bow down before anyone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X