ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு: பாக்.தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்தது இந்தியா
எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்று அவர்களின் தலையைத் துண்டித்த பாகிஸ்தான் ராணுவ காட்டுமிராண்டித்தன செயலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்று அவர்களின் தலையைத் துண்டித்த பாகிஸ்தான் ராணுவ காட்டுமிராண்டித்தன செயலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது. அதோடு கொல்லப்பட்ட 2 ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்து காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டனர் பாகிஸ்தான் ராணுவத்தினர்.

இந்த சம்பவத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பசிதை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தைநேரில் தெரிவித்தது.
இதனிடையே இன்றும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications