மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு.. ராணுவம் வாபஸ் பெறப்பட்டது
மேற்கு வங்கத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிருப்புப் போராட்டத்தை நிறைவு செய்து தனது வீடு திரும்பினார்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிருப்பு போராட்டத்தை முடித்து வீடு திரும்பினார்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள அந்த மாநில தலைமைச் செயலகம் வளாகம், அங்குள்ள முக்கிய பகுதிகளின் சுங்கச்சாவடிகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு, மாநில அரசிடம் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி, அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ராணுவத்தினை திரும்பப் பெறும் வரை, தலைமைச் செயலகக் கட்டிடத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகவும் அவர் அறிவித்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இப்பிரச்னை எதிரொலித்தது.
இதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மன வேதனை தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாகக் கூறி, அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்புதல் கோரப்பட்டது. இந்நிலையில், அனுமதி பெறவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா திடீரென சர்ச்சையை ஏற்படுத்துவதாக மனோகர் பாரிக்கர் குற்றம் சாட்டினார்.
எனினும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, அம்மாநிலத்தில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. அதனை முழுவதுமாக உறுதி செய்தபின், உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications