அப்துல் கலாம் உடனான கனவு சந்திப்புக்காக காத்திருக்கும் ராணுவ வீரர்
பெங்களூர்: இந்திய ராணுவத்தில் சிப்பாயாக இருக்கும் 30 வயது சி. ரஞ்சித்தின் கனவு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்கும்போது நனவாகும்.
கேரளாவைச் சேர்ந்த விவசாயியின் மகனான ரஞ்சித் ஒரு ஓவியர். அவர் கடந்த 12 ஆண்டுகளாக ராணுவத்தில் உள்ளார். விலங்கு பிரியரான அவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. இந்நிலையில் அவர் இன்று பெங்களூரில் ராஜ் பவனில் வைத்து அப்துல் கலாமை சந்திக்க உள்ளார்.

ரஞ்சித் வரைந்த ஓவியங்களை வைத்து பெங்களூரில் கடந்த 10ம் தேதி ஓவியக் கண்காட்சி துவங்கப்பட்டது. விழிதுத்துக்கொள் என்ற தலைப்பிலான அந்த கண்காட்சி 5 நாட்களுக்கு நடக்கிறது. விலங்குகளில் அதிலும் குறிப்பாக பசு வதையை ஏற்காதீர்கள் என்பது தான் கண்காட்சி நடத்தப்படுவதின் முக்கிய நோக்கம் ஆகும். கண்காட்சியில் விலங்குகளை கொல்வதற்கு எதிரான ஓவியங்கள் தவிர்த்து ரஞ்சித் வரைந்த பிற ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரஞ்சித் அப்துல் கலாமை ஓவியமாக வரைந்துள்ளதையும் கண்காட்சியில் வைத்துள்ளார். கலாமின் ஓவியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கண்காட்சியில் விற்கப்படும் ஓவியங்களில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து ஏழை விவசாயி ஒருவருக்கு பசு மாடு வாங்கிக் கொடுக்க திட்டமிட்டுள்ளார் ரஞ்சித்.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில்
எனது ஓவியங்களில் இருந்து கிடைக்கும் பணத்தில் ஒரு பைசாவைக் கூட எடுக்க மாட்டேன். கடவுள் எனக்கு திறமையை அளித்துள்ளார். அதை வைத்து சமூகத்திற்கு உதவ விரும்புகிறேன். பசுக்களை நாம் மதிக்க வேண்டும். தாய்ப்பாலை அடுத்து நமக்கு கிடைக்கும் அரிய பொருள் பசுவின் பால்.
கலாம் சார் என் ஓவியத்தை பார்த்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆவேன். ராணுவம் தான் என் வாழ்க்கை. அது எனக்கு அனைத்தையும் அளித்துள்ளது. என்னை ஓவியம் வரை ஊக்கப்படுத்தும் மூத்த அதிகாரிகள், சீனியர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ரஞ்சித் தற்போது பெங்களூரில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா சப்-ஏரியா கமாண்டில் பணிபுரிகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications