பெரியார் ஆற்றில் பெரு வெள்ளம்.. கொச்சி சர்வதேச ஏர்போர்ட்டுக்கு ஆபத்து.. பாதித்த விமான சேவை

Subscribe to Oneindia Tamil

கொச்சி: பெரியார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான வருகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையால் கேரளாவின் எர்ணாகுளம், மலப்புரம், வயனாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

Arrival operations at Cochin international airport stopped

இந்த நிலையில் பெரியார் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதன் அருகே அமைந்துள்ள கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமையான இன்று பகல் 1.10 மணி முதல் கொச்சி விமான நிலையத்திற்குள் வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. ஆய்வுகளுக்கு பிறகு மதியம் 3.05 மணிக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பித்தது.

Arrival operations at Cochin international airport resume after two hours

இடமலயார் அணையில் கூடுதலாக நான்கு மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாலும், இடுக்கி அணையில் இருந்து வெள்ளோட்ட அடிப்படையில் மதகு திறக்கப்பட்டதாலும், பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+