ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி- மீண்டும் ராஜினாமா செய்தார் கேஜ்ரிவால்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி சரித்திரம் படைத்தது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர், கேஜ்ரிவால் என்ற தனிநபரை மையமாக வைத்தே கட்சியும் இயங்குவதாக குற்றம்சாட்டி வந்தனர். இது தொடர்பாக செயற்குழு உறுப்பினர்களுக்கு பிரசாந்த் பூஷண் கடிதமும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தமது தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.
ஆனால் இந்த ராஜினாமாவை கட்சி நிராகரித்துவிட்டதாக யோகேந்திர யாதவ் அறிவித்திருந்தார். இந்த களேபரங்களுக்கு மத்தியில் டெல்லியில் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுக் கூட்டம் மீண்டும் இன்று நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் உடல்நலக் குறைவால் கேஜ்ரிவால் கலந்து கொள்ளமாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தமது ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேசிய செயற்குழுவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், டெல்லி முதல்வராக இருப்பதால் மாநில நிர்வாகத்தைக் கவனிக்கவே தாம் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளதால் ராஜினாமா செய்வதாக கேஜ்ரிவால் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் கேஜ்ரிவாலின் இந்த 2வது ராஜினாமா கடிதம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுதான் இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications