அர்விந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது: ரிலையன்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தியோரா, நிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எரிவாயு தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்தி ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் விலை ஏற்றம் செய்யப்பட்டிருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Arvind Kejriwal targets Mukesh Ambani, criminal case is 'shocking,' says Reliance

இந்த நிலையில் இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீது கூறப்படும் புகார்கள் ஆதரமற்றவை என்றும் மறுப்பு கூறியுள்ளது. இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் அர்விந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. அதேசமயம், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு வீரப்ப மொய்லி கண்டனம் தெரிவித்ததோடு கெஜ்ரிவாலுக்கு நிர்வாகம் குறித்து தெரியாது என்றும் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+