நேற்று மழையால் போட்டி கைவிடப்பட்டதால்.. மனதளவில் கொஞ்சம் சோர்வு அடைந்தோம்.. சுப்மன் கில்
அகமதாபாத்: ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் நேற்று மழை குறுக்கிட்டதால் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று போட்டி தொடங்கும் முன்பாக பேட்டி அளித்த சுப்மன் கில், நேற்று போட்டி நடைபெறாததால் மனதளவில் சோர்வாக உணர்ந்ததாக குறிப்பிட்டார்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்த்தில் நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இங்கு ஏறத்தாழ லட்சம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்க முடியும். இறுதிப்போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. போட்டியைக் காண ரசிகர்கள் பட்டாளம் அணி அணியாக திரண்டது.

ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை குறுக்கிட்டது. ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ரசிகர்கள் மழையின் ஆட்டத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. மைதானத்திற்குள் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் போட்டி நேற்று கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரிசர்வ் டேவான இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஐபிஎல் இறூதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நேற்று போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் மட்டும் அல்ல வீரர்களும் சோர்வடைந்துதான் போயிருக்கின்றனர். குஜராத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மான் கில் இது தொடர்பாக கூறியதாவது:-
நேற்று விளையாடுவதற்காக நாங்கள் தயாராக இருந்தோம். நாங்கள் அதன்பிறகு எந்த உடல் பயிற்சியிலும் ஈடுபடவில்லை. எனவே மனதளவில் சற்று சோர்வாக உணர்ந்தேன். ஆனால் உடல் அளவில் நன்றாக இருக்கிறோம். மற்றொரு போட்டி போலவே இதை விளையாடி பணியை சிறப்பாக முடிக்க வேண்டும்" என்றார்.
இதற்கிடையே இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இந்த சீசனில் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் துவக்கத்தில் அதிரடி காட்டினார். சுப்மன் கில் கொடுத்த கேட்சையும் தீபக் சஹார் தவறவிட்டார்.
இதனால் அவருக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்கவே பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். எனினும் நீண்ட நேரம் அவரால் நிலைக்க முடியவில்லை. 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் தோனி ஸ்டம்பிங் செய்ய ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications