Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிசோரத்தில் மீசை முறுக்கும் பாஜக.. இது நடந்தால் காங்கிரஸுக்கு பெரும் சிக்கல்! வெற்றி யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

அய்சால்: மிசோரத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அங்கு யாருக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது? தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 40 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் சொராம்தங்கா தலைமையிலான எம்.என்.எப் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் எம்.என்.எப், ZPM மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டன.

As voting in Mizoram completed, which party had chance for victory?

பாஜகவும் தன் பங்கிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் மும்முனைப் போட்டியே நீடித்தது. தேர்தல் பரபரப்புகள் முடிந்து நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வமாக நின்று ஜனநாயக கடமையை ஆற்றினர். அதன் அடிப்படையில் 80.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 80.03 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன.

அதை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் .40 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதுவரை வெளியான தகவலின்படி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்றும், தேர்தல் முடிவுகளில் சிறிய அளவிலான தொகுதி வித்தியாசமே இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குகி-சோ சமுதாயத்தை சேர்ந்த 12 ஆயிரம் பேர் உட்பட மியான்மரிலிருந்து வந்த 35,000 அகதிகளுக்கு இருப்பிடம் வழங்கியது, மிசோ தேசியவாத கொள்கையை உயர்த்திப் பிடித்தது போன்றவை ஆளும் எம்.என்.எப் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் முழுக்க முழுக்க ஊழல் ஒழிப்பையும், ஊழலற்ற அரசை நடத்துவோம் என ஆம் ஆத்மி ஸ்டைலில் பிரச்சாரம் செய்த ZPM கட்சிக்கும் இதில் நல்ல வரவேற்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 தேர்தலிலும் இக்கட்சி 8 இடங்களில் வெற்றிபெற்று இருந்தது. இக்கட்சியின் வளர்ச்சி காங்கிரஸுக்கு சவாலாக இருந்தது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி இம்முறை மீண்டெழுந்து இருப்பதாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த மூன்று கட்சிகளில் ஏதாவது ஒன்று முன்னிலை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் மிசோரத்தில் குட்டி கட்சியாக பார்க்கப்படும் பாஜகவே இந்த தேர்தலில் கிங் மேக்கராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகளில் இழுபறி நிலை தொடர்ந்தாலோ தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டாலோ குறைவான இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, ஆளும் எம்.என்.எப் அல்லது ZPM ஆகிய கட்சிகளுக்கு ஆதரவளித்து ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. எனவே காங்கிரஸ் அதிக தொகுதிகள் வித்தியாசத்தில் வெற்றிபெறாவிட்டால் ஆட்சியமைப்பது கடினமாகிவிடும். இதனை மனதில் வைத்து மிசோரம் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, எம்.என்.எப் மற்றும் ZPM ஆகிய கட்சிகளை பாஜகவின் நிழைவு வாயில் என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+