ஆர்எஸ்எஸ் பிரசாரகராக செயல்படும் ஆளுநர் ஆச்சார்யா-நீக்க கோரும் அஸ்ஸாம் முதல்வர்!!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில கூடுதல் பொறுப்பை வகிக்கும் ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவை நீக்கிவிட்டு நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் தருண் கோகய் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாகாலாந்து ஆளுநராக பி.பி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அதேபோல் அஸ்ஸாம் ஆளுநராக இருந்த ஜே.பி. பட்நாயக்கும் மோடி அரசின் நெருக்கடியால் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவி விலக நேரிட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டு காலமாக நாகாலாந்து ஆளுநரான பி.பி. ஆச்சார்யாவே அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆச்சார்யா, இந்துஸ்தான் என்பது இந்துக்களுக்கு மட்டுமே உரியது என கூறியதாக சர்ச்சை எழுந்தது.
ஆனால் இதை நேற்று மறுத்த ஆச்சார்யா, இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட நாடு...பார்சி சமூகம் ஈரானில் இப்போது இல்லை.. ஆனால் இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. தொழிலதிபர்களான டாடா, கோத்ரேஜ், வாடியா போன்றவர்கள் பார்சிகளே என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனிடையே ஆச்சார்யா, ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக செயல்படுவதாகவும் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் தருண் கோகய் போர்க்கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தின் அரசியல் சாசனப்படியான தலைவராக இருப்பேன் என பதவி ஏற்ற உறுதிமொழியை மீறி இந்துக்களுக்கு மட்டுமே இந்துஸ்தான் சொந்தமானது என பேசி வருகிறார் பி.பி. ஆச்சார்யா. ஒரு மாநிலத்தின் அரசியல் சாசனப்படியான தலைவர் என்பதை விட ஆர்.எஸ்.எஸ். பிரசாரகத்தான் ஆச்சார்யா செயல்பட்டு வருகிறார்.
அஸ்ஸாம் ஆளுநராக பி.பி. ஆச்சார்யா நீடித்தால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க.வுக்காக தேர்தல் பணியாற்றவும் அவர் தயங்கமாட்டார். ஆகையால் அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் ஆச்சார்யாவை நீக்கிவிட்டு நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு தருண் கோகய் வலியுறுத்தியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications