ராமர் கோயில் திறப்புக்காக.. முஸ்லிம், கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தனும் - அசாம் முதல்வர்
கவுகாத்தி: நாளை ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் நாளை சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார்.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர், நாளை ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இஸ்லாமிய சகோதரர்களே, கிறிஸ்தவ சகோதரர்களே, நாளை சிறப்புப் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், அனைத்து சாதி மற்றும் சமூகங்களை சேர்ந்த நாம் அனைவரும் அமைதியாக ஒன்றாக வாழ முடியும்.

இது இந்துக்களின் வெற்றி அல்ல, இந்திய நாகரிகத்தின் வெற்றி. இது ஒரு மதத்தின் வெற்றி கிடையாது. படையெடுப்பாளர் இந்தியாவின் ஒரு வழிபாட்டுத் தலத்தை இடித்தார். ஆம், பாபர் ஒரு படையெடுப்பாளர்தான். அவர் இந்துக்களை மட்டும் தாக்கவில்லை. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கும் பாபருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பாபர் ஒரு வெளிநாட்டு சக்தி." என்றார். ராமர் கோயில் திறப்பு விழாவின்போது அசாமில் அசம்பாவீதங்கள் ஏற்படாமல் தடுக்க பல கட்ட பாதுகாப்புகள் போடப்பட்டு உள்ளன.
கிபி 1528 ஆம் ஆண்டுஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் முகலாய பேரரசர் பாபரால் கட்டப்பட்டது பாபர் மசூதி. 495 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கொண்டு இருந்த நிலையில், அது அமைந்து உள்ள நிலத்தை ராம ஜென்ம பூமி என்று உரிமை கோரி வந்த இந்துத்துவாவினர் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை தகர்த்தனர். இதனால் நாடு முழுவதும் மதக் கலவரங்கள் மூண்டன.
இதனை அடுத்து பாபர் மசூதி நிலத்திற்கான வழக்கு விசாரணை கீழ் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை நடைபெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துத்துவ அமைப்பினரின் கோரிக்கையின்படி ராமர் கோயிலை கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்ததுது. இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடி கோவிலின் அடிக்கல்லை நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நாளை கோயில் திறக்கப்பட உள்ளது. நாளை மதியம் 12 மணி முதல் 12:45 மணிக்குள் ராமர் சிலையை ராமர் கோயிலின் கருவறையில் வைக்க முடிவு செய்து உள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், மத குருக்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications