மேற்குவங்கத்தில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி! ஆறஅமர வந்த போலீஸ் மீது கற்களை வீசிய பொதுமக்கள்!
மேற்குவங்கத்தில் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காலை 6 மணிக்க பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
கொல்கத்தாவில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூர்ஷிதாபாத் என்ற இடத்தில் பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

32 பேர் பரிதாப பலி
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சிறிய படகுகள் மூலம் பேருந்தில் சிக்கியிருந்தவர்களையும் கால்வாய்க்குள் மூழ்கியவர்களையும் மீட்டனர். இருப்பினும் இந்த கோரவிபத்தில் 32 பயணிகள் உயிரிழந்தனர்.

ஆரஅமர வந்த போலீஸ்
காயமடைந்தவர்கள் மூர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பாரம்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் ஆர அமர தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போலீஸ் மீது கல்வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாமதமாக வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

கண்ணீர் புகைக்குண்டு
இதையடுத்து தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் முதல்வர்
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தையும் முதல்வர் மமதா பானர்ஜி பார்வையிட்டார்.

போன், வேகம், விபத்து
இதனிடையே பேருந்து ஓட்டுநர் போனில் பேசியபடியே பேருந்தை இயக்கியதாகவும் அதிவேகமாக சென்றதாகவும் விபத்தில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். பாலத்தின் மீது போனில் பேசியபடி அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை வளைத்த போது கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்ததாகவும் விபத்தில் தப்பி பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications