மேற்குவங்கத்தில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி! ஆறஅமர வந்த போலீஸ் மீது கற்களை வீசிய பொதுமக்கள்!
மேற்குவங்கத்தில் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காலை 6 மணிக்க பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
கொல்கத்தாவில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூர்ஷிதாபாத் என்ற இடத்தில் பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

32 பேர் பரிதாப பலி
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சிறிய படகுகள் மூலம் பேருந்தில் சிக்கியிருந்தவர்களையும் கால்வாய்க்குள் மூழ்கியவர்களையும் மீட்டனர். இருப்பினும் இந்த கோரவிபத்தில் 32 பயணிகள் உயிரிழந்தனர்.

ஆரஅமர வந்த போலீஸ்
காயமடைந்தவர்கள் மூர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பாரம்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் ஆர அமர தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போலீஸ் மீது கல்வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாமதமாக வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

கண்ணீர் புகைக்குண்டு
இதையடுத்து தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் முதல்வர்
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தையும் முதல்வர் மமதா பானர்ஜி பார்வையிட்டார்.

போன், வேகம், விபத்து
இதனிடையே பேருந்து ஓட்டுநர் போனில் பேசியபடியே பேருந்தை இயக்கியதாகவும் அதிவேகமாக சென்றதாகவும் விபத்தில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். பாலத்தின் மீது போனில் பேசியபடி அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை வளைத்த போது கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்ததாகவும் விபத்தில் தப்பி பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications