வாஜ்பாய் கவலைக்கிடம்.. பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
Recommended Video

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூலை 11-ஆம் தேதி முதல் வாஜ்பாய் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக நோய் தொற்று காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரக நோய்த்தொற்று, நெஞ்சக அடைப்பு பாதிப்பு போன்றவை இன்னும் தீரவில்லை. எனவே வாஜ்பாய் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் 20ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடத்தவும், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மகள் பிரதீபா அத்வானி, இன்று, எய்ம்ஸ், மருத்துவமனைக்கு வந்து வாஜ்பாய் உடல்நலம் விசாரித்தார். இதேபோல உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் வாஜ்பாய் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
டெல்லியில், வாஜ்பாய் வீடு அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications