செல்ஃபி எடுக்கையில் கிணற்றில் விழுந்த ஆஸி. பெண்: என்னம்மா இப்படி இருக்கீங்களேம்மா
அகமதாபாத்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குஜராத்தில் செல்ஃபி எடுக்கையில் கிணற்றில் தவறி விழுந்தார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். குஜராத் மாநிலத்திற்கு சென்ற அவர் கடந்த 25ம் தேதி ஜுனாகத் கோட்டைக்கு சென்றார். அங்கு அவர் கிணற்றின் அருகே நின்று செல்ஃபி எடுத்தார்.

அப்போது அவர் கால் தவறி கிணற்றில் விழுந்தார். 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த அவர் தன்னை காப்பாற்றுமாறு அலறினார். அவரது சப்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் தங்களின் உடைகளை கயிறாக்கி அந்த பெண்ணை கிணற்றில் போட்டனர்.
அப்பெண் அந்த துணிக்கயிறை பிடித்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. கிணற்றில் விழுந்ததில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் சுற்றுலாத் தளங்களில் மக்கள் விபத்தில் சிக்குவது வழக்கமாகிவிட்டது.
செல்ஃபி எடுக்கையில் பலியாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications