பெங்களூரில் தனியாக பயணித்த 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: ஆட்டோ டிரைவர் கைது
பெங்களூர்: பெங்களூரில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் 11 வயது சிறுமி ஒருவர் கெம்பே கவுடா பேருந்து முனையத்தில் இருந்து சிட்டி மார்கெட்டுக்கு செல்ல கடந்த செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு ஆட்டோ எடுத்துள்ளார். வழியில் மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி. பொது மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள பூங்கா அருகே ஆட்டோவை நிறுத்தியுள்ளார் டிரைவர் சுரேஷ். அவர் சிறுமியை பூங்காவுக்குள் இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து மல்லேஸ்வரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து சுரேஷை கைது செய்தனர்.
மேலும் சிறுமிக்கு ஆலோசனை வழங்குமாறு குழந்தைகள் நல கமிட்டியை கேட்டுக் கொண்டனர். பின்னர் சிறுமியை சிட்டி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் அவரின் பாட்டியிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications