டீசல் கார் தடையால் ரூ.4,000 கோடி இழப்பு.. அதிருப்தியில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள்
டெல்லி: டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்த 8 மாதங்களில் ரூ.4 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 2 ஆயிரம் சிசி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட டீசல் வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் தடை விதித்தது. 8 மாதத்திற்கு பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கடந்த 8 மாதங்களில் ரூ.4 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 58-வது ஆண்டு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் தலைவர் வினோத் தாசரி கூறியதாவது: டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தவறான தகவல் கூறப்படுகிறது. நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட தவறான தகவல்தான், தடை விதிப்புக்கு காரணமாகிவிட்டது.
ஆனால், உண்மையில் அந்த டீசல் வாகனங்கள் அனைத்தும் அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ளது. ஆனாலும் தடை விதிக்கப்பட்டதால் கடந்த 8 மாதங்களில் ரூ.4 ஆயிரம் கோடியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இழந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட மூலக்காரணம் என்ன என்பதை அறியாமல் எல்லோரும் ஆட்டோமொபைல் துறையை ஒழுங்குபடுத்த விரும்புகின்றனர்.
உண்மையில், 20 சதவீதத்திற்கும் குறைவான அளவே டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகின்றன. டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பதைவிட பழைய வாகனங்களுக்கு தடை விதிக்கலாம். அவைதான் அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றார்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications