Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எரிக்கவும் - புதைக்கவும் இல்லை..அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடலில் கல்லை கட்டி ஆற்றில் வீச்சு

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி மகாந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்படவில்லை. அதேபோல் அவரது உடல் தகனம் செய்யப்படவில்லை. மாறாக சரயு ஆற்றில் கல்லை கட்டி ஜலசமாதி செய்தனர். அதன் பின்னணி பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நீண்ட கால சட்டப்போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ayodhya chief priest jal samadhi

இந்த கோவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கோவில் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்று திறந்து வைத்தார். அயோத்தி ராமஜென்மபூமி கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் செயல்பட்டு வந்தார். இவருக்கு 85 வயது.

இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மஹந்த் சத்யேந்திர தாஸ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மஹந்த் சத்யேந்திர தாஸ் உயிரிழந்தார். 1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பின்போது ராமர் கோவிலின் பூசாரியாக மஹந்த் சத்யேந்திர தாஸ் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு அந்த வளாகத்தை அரசு கைப்பற்றியபோது அவர் தலைமை பூசாரியாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் பாலன்குயினில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கோவில் நிர்வாகிகள், இந்து அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சரயு ஆற்றில் ஜல சமாதி செய்யப்பட்டது. துளசிதாஸ் காட் பகுதியில் ஓடும் சரயு ஆற்றின் நடுப்பகுதிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உடலில் கல்லை கட்டி படகில் இருந்து சரயு ஆற்றுக்குள் தள்ளிவிடப்பட்டது. இப்படியாக அவரது உடல் ஜல சமாதியாக்கப்பட்டது.

இதுபற்றி அயோத்தி கோவிலின் புதிய தலைமை பூசாரி பிரதீப் தாஸ் கூறுகையில், ‛‛ராமானந்தி பிரிவில் மரபு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த மரபின்படி மஹாந்த் சத்யேந்திர தாஸின் உடல் சரயு ஆற்றில் ஜலசமாதி செய்யப்பட்டுள்ளளது. உடலில் கல்லை கட்டி ஜலசமாதி முறை நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+