புயல் தாக்கிய இரவு பிறந்த குழந்தைகளுக்கு 'பாய்லின்' பெயர்
கஞ்சம்: ஒடிஷாவை புயல் தாக்கியபோது பிறந்த குழந்தைகளுக்கு பாய்லின் என்று பெயர் வைக்கவிருக்கிறார்கள்.
ஒடிஷா மாநிலத்தை பாய்லின் புயல் தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாய்லினால் பாதிக்கப்பட்டுள்ள கஞ்சம் மாவட்டத்தில் இருக்கும் பெர்ஹாம்பூரில் புயல் தாக்கிய அன்று 27 குழந்தைகள் பிறந்துள்ளன.
நகரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 குழந்தைகளும், கிறிஸ்டியன் மருத்துவமனையில் 17 குழந்தைகளும் மற்றும் சிட்டி மருத்துவமனையில் 3 குழந்தைகளும் பிறந்துள்ளன.

தங்கள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பாய்லின் என்று பெயர் வைக்குமாறு அவர்களின் பெற்றோர்களை கேட்டுக் கொண்டதாக கிறிஸ்டியன் மருத்துவமனை தலைவர் என்.கே. நந்தா தெரிவித்துள்ளார்.
புயல் தாக்கியபோது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லலிதா பாரிக் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லலிதா கூறுகையில்,
முன்னதாக என்னுடைய 4 குழந்தைகள் இறந்துவிட்டன. என் மகள் மட்டும் உயிர் பிழைத்தால் அவளுக்கு நிச்சயமாக பாய்லின் என்று தான் பெயர் வைப்பேன் என்றார்.
அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் இருந்த பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தூஃபான்(புயல்) என்று பெயர் வைக்குமாறு அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த குழந்தைகள் அனைவரும் கடந்த 12ம் தேதி இரவு பாய்லின் கோபால்பூர் கடலோரம் அமைந்துள்ள பகுதியை தாக்கியபோது பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications