புயல் தாக்கிய இரவு பிறந்த குழந்தைகளுக்கு 'பாய்லின்' பெயர்
கஞ்சம்: ஒடிஷாவை புயல் தாக்கியபோது பிறந்த குழந்தைகளுக்கு பாய்லின் என்று பெயர் வைக்கவிருக்கிறார்கள்.
ஒடிஷா மாநிலத்தை பாய்லின் புயல் தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாய்லினால் பாதிக்கப்பட்டுள்ள கஞ்சம் மாவட்டத்தில் இருக்கும் பெர்ஹாம்பூரில் புயல் தாக்கிய அன்று 27 குழந்தைகள் பிறந்துள்ளன.
நகரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 குழந்தைகளும், கிறிஸ்டியன் மருத்துவமனையில் 17 குழந்தைகளும் மற்றும் சிட்டி மருத்துவமனையில் 3 குழந்தைகளும் பிறந்துள்ளன.

தங்கள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பாய்லின் என்று பெயர் வைக்குமாறு அவர்களின் பெற்றோர்களை கேட்டுக் கொண்டதாக கிறிஸ்டியன் மருத்துவமனை தலைவர் என்.கே. நந்தா தெரிவித்துள்ளார்.
புயல் தாக்கியபோது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லலிதா பாரிக் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லலிதா கூறுகையில்,
முன்னதாக என்னுடைய 4 குழந்தைகள் இறந்துவிட்டன. என் மகள் மட்டும் உயிர் பிழைத்தால் அவளுக்கு நிச்சயமாக பாய்லின் என்று தான் பெயர் வைப்பேன் என்றார்.
அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் இருந்த பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தூஃபான்(புயல்) என்று பெயர் வைக்குமாறு அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த குழந்தைகள் அனைவரும் கடந்த 12ம் தேதி இரவு பாய்லின் கோபால்பூர் கடலோரம் அமைந்துள்ள பகுதியை தாக்கியபோது பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications