மருத்துவமனை அலட்சியத்தால் விரலை இழந்த 2 மாத குழந்தை.. டாக்டர், 2 நர்சுகள் சஸ்பெண்ட்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரண்டு மாத குழந்தையின் விரல் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, டாக்டர் மற்றும் இரண்டு நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டம் அசான்சோல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் இரண்டு மாதக்குழந்தையின் விரல் செயல் இழந்தது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் அக்குழந்தையின் விரல் கொல்கத்தா மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் நீக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆர்.எம்.ஓ. அனீஷ் குமார் மற்றும் இரண்டு நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஊழியர்களின் அலட்சியத்தினாலேயே குழந்தையின் விரல் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட குழந்தையின் பெயர், பாலினம், அவரது குடும்பம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் விரல் அகற்றப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்தாண்டு தினஜ்பூர் மாவட்டத்தில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் புதிதாக பிறந்த குழந்தையின் விரல் அகற்றப்பட்டது நினைவுக் கூறத்தக்கது.












Click it and Unblock the Notifications