நம்பினால் நம்புங்கள்... பால்கோட் பகுதியில் 170 தீவிரவாதிகள் சாவு.. இத்தாலி பத்திரிகையாளர் தகவல்
Recommended Video
டெல்லி: பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் 170 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், பாகிஸ்தான் அரசு எந்த சம்பவமும் நடக்கவில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது.
இருப்பினும், இந்திய விமானப்படை தாக்குதலில் 250 - 300 தீவிரவாதிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆதாரங்களை காட்டும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
நடந்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் புல்வாமா தாக்குதல் விவகாரம் எதிரொலித்தன. காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்திருப்பதாக கூறப்பட்டது. மேலும், நரேந்திர மோடி விளம்பரத்திற்காக ராணுவ தாக்குதலை பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

செயற்கை கோள் புகைப்படம்
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து, செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், குறிப்பிட்டு சொல்லப்படும் இடத்தில் எந்த தாக்குதலும் நடைபெற்றது போன்ற அறிகுறி இல்லை என பிரபல செய்திநிறுவனம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சந்தேகம் வலுத்தது.

இத்தாலி பத்திரிகையாளர்
இந்தநிலையில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரான பிரான்செஸ்கா மரினோ, கடந்த பிப்ரவரி 26 ம் தேதியன்று இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் 130 - 170 ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், தாக்குதலுக்கு உள்ளான சுமார் 45 பேர் வரை ஷின்கியாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நம்பகமான தகவல்
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து நம்பகமான ஆதாரங்களின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சொல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாத பயிற்சியாளர்களும் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, முகாம் இருந்த இடம் சீலிடப்பட்டு இப்போது வரைக்கும் யாருக்கும் அனுமதி அளிக்கப்பட வில்லை. மாறாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட பகுதி உள்ளது என்றும் தெரிவித்தார். அதற்கான சில புகைப்படங்களையும் பிரான்செஸ்கா மரினோ வெளியிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications