தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதியுங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் டெல்லியில் ஷீலா தீட்சித் தோல்வி அடைவார் என்றும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. . இந்த முடிவுகளால் காங்கிரஸ் கட்சி கவலை அடைந்துள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த கருத்துக் கணிப்புகளில் நன்பகத்தன்மை இல்லை என்றும், அதன் முடிவுகள் மக்கள் மனதை மாற்ற தவறாக பயன்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸின் இந்த செயலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications