ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு பெங்களூர் கோர்ட் அபராதம்!
பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதிவாதத்தை தொடங்காத சசிகலா, சுதாகரன், இளவரசி மூவருக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மேலும் இறுதி வாதம் நடைபெறும் நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தமது இறுதிவாதத்தை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் இறுதி வாதம் தொடங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2 நாட்களாக சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் வாதம் தொடங்கப்படவில்லை.
மேலும் இறுதிவாதத்தை தொடங்க கால அவகாசம் கோரிய சசிகலா தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை இன்று 2வது நாளும் சசிகலா தரப்பினர் தொடங்கவில்லை.
இதனையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இறுதி வாதத்தை தொடங்காததால் மூவருக்கும் தலா ரூ.3000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்
அத்துடன் இறுதிவாதம் நடைபெறும் நாட்களில் மூவரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications