தெரு நாய் போட்ட 8 குட்டிகளை பாறாங்கல்லை வீசி பயங்கரமாக கொன்ற பெங்களூர் பெண்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் பெண் ஒருவர் தெருநாய் ஒன்று தனது வீட்டிற்கு அருகே குட்டி போட்டதை பிடிக்காமல் அதன் 8 குட்டிகளையும் பாறாங்கல் மீது வீசி எறிந்து கொன்றுள்ளார்.

டெல்லியில் ஆண் ஒருவர் நாய்களை கொலை செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் பெங்களூரிலும் அதை போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் பொன்னம்மா என்பவரின் வீட்டிற்கு அருகே தெருநாயான அம்மு 8 குட்டிகள் போட்டுள்ளது.

Bangalore woman kills 8 puppies to teach their mother a lesson

தனது வீட்டிற்கு அருகே நாய் குட்டிபோட்டது பொன்னம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதையடுத்து பொன்னம்மா அம்முவுக்கு பாடம் கற்பிக்க அது ஈன்ற 8 குட்டிகளையும் பாறாங்கல் மீது தூக்கி வீசினார். இதில் 7 குட்டிகள் உடனே இறந்துவிட்டன. ஒரு குட்டி மறுநாள் இறந்துவிட்டது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொன்னம்மா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

நாய் அம்முவால் தனது குட்டிகள் இறந்ததை ஏற்கமுடியாமல் அவை புதைக்கப்பட்டுள்ள இடத்தை தோண்டிக் கொண்டே இருக்கிறது. பொன்னம்மாவின் வீடு இருக்கும் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+