For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெரு நாய் போட்ட 8 குட்டிகளை பாறாங்கல்லை வீசி பயங்கரமாக கொன்ற பெங்களூர் பெண்!

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் பெண் ஒருவர் தெருநாய் ஒன்று தனது வீட்டிற்கு அருகே குட்டி போட்டதை பிடிக்காமல் அதன் 8 குட்டிகளையும் பாறாங்கல் மீது வீசி எறிந்து கொன்றுள்ளார்.

டெல்லியில் ஆண் ஒருவர் நாய்களை கொலை செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் பெங்களூரிலும் அதை போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் பொன்னம்மா என்பவரின் வீட்டிற்கு அருகே தெருநாயான அம்மு 8 குட்டிகள் போட்டுள்ளது.

Bangalore woman kills 8 puppies to teach their mother a lesson

தனது வீட்டிற்கு அருகே நாய் குட்டிபோட்டது பொன்னம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதையடுத்து பொன்னம்மா அம்முவுக்கு பாடம் கற்பிக்க அது ஈன்ற 8 குட்டிகளையும் பாறாங்கல் மீது தூக்கி வீசினார். இதில் 7 குட்டிகள் உடனே இறந்துவிட்டன. ஒரு குட்டி மறுநாள் இறந்துவிட்டது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொன்னம்மா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

நாய் அம்முவால் தனது குட்டிகள் இறந்ததை ஏற்கமுடியாமல் அவை புதைக்கப்பட்டுள்ள இடத்தை தோண்டிக் கொண்டே இருக்கிறது. பொன்னம்மாவின் வீடு இருக்கும் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

English summary
A Bangalore based woman killed eight puppies that were born near her house to teach their mother a lesson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X