ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- தீர்ப்பு தேதி செப். 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு! நீதிமன்றமும் இடமாற்றம்!!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகால இழுத்தடிப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்து வரும் 20-ந் தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அறிவித்திருந்தார்.

ஜெ. புதிய மனு
இந்த நிலையில் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் நேற்று ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொத்து குவிப்பு வழக்கில் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு
தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளார். தற்போது வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஜெயலலிதா நேரில் வந்து வாக்குமூலம் அளித்தபோது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பரப்பன அக்ரஹாரத்துக்கு நீதிமன்றம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

நீதிமன்றம் மாற்றம்
அதேபோல் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று நீதிமன்றத்தை பார்ப்பன அக்ரகாரத்துக்கு மாற்ற வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு
இம்மனு மீது இன்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா விசாரணை நடத்தினார். இன்றைய விசாரணையின் முடிவில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 20-ந் தேதிக்கு பதிலாக 27-ந் தேதிக்கு வழங்கப்படும். மேலும் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு வழங்கும் நாளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பரப்பன அக்ரஹாரத்துக்கு தற்காலிகமாக நீதிமன்றம் மாற்றப்படும் என்று அறிவித்தார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications