செல்லாத ரூபாய் நோட்டுகளை ஜூலை 20 வரை டெபாசிட் செய்ய.. வங்கிகளுக்கு காலக்கெடு
பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ள வரும் ஜூலை 20ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது மத்திய அரசு.
டெல்லி: செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்ய, ஜூலை 20ம் தேதி வரை வங்கிகளுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இதையடுத்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி கிளைகளிலும் பொதுமக்கள் டெபாசிட் செய்து வந்தனர்.

2017 மார்ச் 31ம் தேதியுடன், பொதுமக்கள் வங்கிகள், ரிசர்வ் வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கெடு முடிவடைந்தது. இதையடுத்து, வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
இதன்படி, செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம், வங்கி நிறுவனங்கள், வரும் ஜூலை மாதம் 20ம் தேதி வரை டெபாசிட் செய்யலாம் என்று, மத்திய அரசு தற்போது மீண்டும் அறிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை, வங்கிகள் தவறவிட வேண்டாம் என்றும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகள் இன்னும் கூடுதலாக டெபாசிட் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications