உ.பி.யில் போலீசாரை தாக்கிய சுரங்க மாபியா ஆட்கள்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்யும் கும்பலால் போலீசார் தாக்கப்பட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பிபிகஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடைபெற்று வருகிறது என்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு நேற்று சோதனை செய்ய சென்றது.
அப்போது சட்டவிரோத சுரங்க தொழில் செய்யும் 15 பேர் போலீசாரை தாக்கினர். இதில் மஹிபால் என்ற போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 15 பேரையும் தடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications