இன்று வசந்த பஞ்சமி! இனி எந்த பிரச்சினையும் வந்துட கூடாது.. மகா கும்பமேளாவில் கடுமையான கட்டுப்பாடுகள்
லக்னோ: மகா கும்பமேளாவில், இன்று வசந்த பஞ்சமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர். அதிகாலையிலேயே பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுவதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பக்தர்கள் புனித நீராடிய பிறகும், தேவையில்லாமல் படித்துறைகளில் தங்க கூடாது, படித்துறைகளில் சாப்பிட கூடாது, சாப்பிடுவதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சாப்பிட செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளவும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துறவிகள், சாதுக்கள், ஆன்மிக பெரியவர்கள் மற்றும் பக்தர்கள் என கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜிக்கு வந்து செல்கிறார்கள்.

இன்று வசந்த பஞ்சமி
இதனால், அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து இதுவரை 35 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்கான முக்கிய தினங்களாக மகரசங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகியவை கூறப்படுகிறது. இதில் இன்று வசந்த பஞ்சமி தினமாகும்.
காலைக்குள் 16 லட்சம் பேர் புனித நீராடல்
இதன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலையில் இருந்தே வசந்த பஞ்சமி புனித நீராடலை பக்தர்கள் தொடங்கி விட்டனர். இன்று அதிகாலையிலேயே பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இன்று காலை 4 மணிக்குள் சுமார் 16 லட்சம் பக்தர்கள் புனித நீராடியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
இன்று ஒருநாளில் மட்டும் 3 கோடி பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்று எதிபார்க்கப்படுவதால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தர பிரதேச அரசு செய்துள்ளது. கடந்த புதன் கிழமை நடைபெற்ற மவுனி அமாவாசை புனித நீராடலின் போது கூட்ட நெரிசல் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து பக்தர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துணை ராணுவம் குவிப்பு
இன்று கும்பமேளாவில் வரும் கூட்டத்தை ஒழுங்க்குபடுத்த முக்கிய இடங்களில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரும் அதிக எண்ணிக்கையில் பாதுகபபு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ அவசர நிலையை கையாள ஏதுவாக பிரக்யாராஜ்ஜில் மொத்த சுகாதார கட்டமைப்பும் தயாராக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்ய நாத் வீட்டில் சிறப்பு வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியில் இருந்தே சூழலை தொடர்ந்து அவர் கண்காணித்து வருகிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications