டெல்லி துணை நிலை ஆளுநருக்கு ஹைகோர்ட் 'அட்வைஸ்'- ஏக குஷியில் கேஜ்ரிவால்!!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் கூடுதல் அதிகாரம் ஆளுநருக்கா? முதல்வருக்கா? என்ற உச்சகட்ட மோதல் நடைபெற்று வரும் நிலையில், மாநில ஆளுநர் என்பவர் அமைச்சர்களின் ஆலோசனை உதவியுடன்தான் செயல்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்தை முதல்வர் கேஜ்ரிவால் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்று மத்திய அரசும் ஆளுநர் நஜீப் ஜங்கும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஆட்சியில் இருக்கும் போது அந்த அரசுக்குத்தான் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்று முதல்வர் கேஜ்ரிவால் போராடி வருகிறார்.
Congrats. Del HC strikes down centre's effort to weaken Delhi's ACB. Del HC- Centre has no jurisdiction to pass notification on ACB's powers
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 25, 2015 இதனால் டெல்லி ஆட்சி நிர்வாகத்தில் மிகப் பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்தில் தலையிட்ட மத்திய அரசும், ஆளுநருக்கே அதிக அதிகாரம் எனக் கூறி வருகிறது.
இந்த நிலையில் யாருக்கு அதிகார்ம என்பது தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி மாநில ஊழல் தடுப்புப் பிரிவானது மத்திய அரசிடம் இருந்து உத்தரவுகளைப் பெறாமல் கேஜ்ரிவால் அரசிடம் இருந்து உத்தரவுகளைப் பெற வேண்டும்; அதேபோல் மாநில அமைச்சர்களின் ஆலோசனைகள் உதவியுடன் ஆளுநர் செயல்பட வேண்டும்; ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications