'வெளியாள்' கவாஸ்கரைப் போய்... தயங்கிய பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோஸ் கட்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக கவாஸ்கரை நியமிப்பது தொடர்பாக தயக்கம் காட்டி வந்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இன்றைய உத்தரவு மூக்கறுப்பாக அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளன. எனவே 'வெளியாளான' கவாஸ்கர் போன்றோரை இடைக்காலத் தலைவராக்க சாத்தியமில்லை என்ற கருத்தில் இருந்தது வாரியம்.

கவாஸ்கரை உள்ளுக்குள் கொண்டு வர அது விரும்பவில்லை. மாறாக, சிவ்லால் யாதவ் , அனில் கும்ப்ளே போன்றோரில் ஒருவரை இடைக்காலத் தலைவராக்க அது விரும்பியது. ஆனால் அதை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்து விட்டது.
அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை இந்த ஆண்டு தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வாரியம் விரும்பியது. அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications