பாகிஸ்தான் அணியுடன் ஆட மறுத்த இந்திய பெண்கள் அணி- ஐசிசி நடவடிக்கையால் பிசிசிஐ கொந்தளிப்பு
பாகிஸ்தானுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாட மறுத்ததற்கு ஐசிசி நடவடிக்கை எடுத்ததற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய பெண்கள் கிரிட்கெட் அணியின் தரவரிசை மதிப்பில் 6 புள்ளிகளை ஐசிசி குறைத்ததற்கு இந்தியா கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்பந்தப்படி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எல்லைப் பிரச்சனை, இந்திய வீரர்கள் படுகொலை, பாகிஸ்தான் படை அத்துமீறள் ஆகிய காரணங்களால் இந்திய பெண்கள் அணி விளையாட மறுத்தது.

இதனால் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தரவரிசை மதிப்பில் 6 புள்ளிகளை சர்வதசே கிரிக்கெட் கவுன்சில் குறைத்துள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமானால் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கு தெரிந்துள்ள நிலையில் இந்திய பெண்கள் அணியின் மீதான நடவடிக்கை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானுடன் கைகோர்த்து இந்த உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், ஐசிசி தனது நடவடிக்கையில் இருந்து பின் வாங்காவிட்டால் பெண்கள் அணிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியும் சாம்பியன் கோப்பை போட்டியில் விளையாடாது என எச்சரித்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications