என்ன கொடுமை சார்... மாட்டுக் கறி தடையால் 'ஜூ' விலங்குகளுக்கு "ஜுஜுப்பி கோழி கறி"தானாம்!!
மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கோழிக்கறிதான் போடப்படுகிறதாம்..
புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளுக்கு எருமை, மாடு போன்றவற்றின் இறைச்சிதான் அதிகம் பிடிக்கும்.. உயிரியல் பூங்காக்களில் இவைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் மாட்டுக்கறி போன்றவைதான் இறைச்சியாக கொடுக்கப்பட்டு வந்தது.

தற்போது மகாராஷ்டிரா அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துவிட்டது. இதனை எதிர்த்து எருமை உட்பட அனைத்து வகை கால்நடை இறைச்சி விற்பனையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் இந்த விலங்குகளுக்கான இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்கும் வகையில் தற்போது கோழிக்கறிகளை அள்ளி போட்டு வருகின்றனர்... விலங்குகளும் போராடவா முடியும் விதியே நினைத்து கிடைத்ததை தின்று போராடிக் கொண்டிருக்கிறது.
என்ன கொடுமை சார்!












Click it and Unblock the Notifications