அம்மா வீட்டுக்கு போகலாம்னு அழைத்த குழந்தை.. 21 நாள் கழித்து சந்தித்த நர்ஸ்.. பெலகாவியில் நெகிழ்ச்சி
பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி "அம்மா வீட்டுக்கு போகலாம்" என பாசப் போராட்டம் நடத்திய குழந்தை 21 நாட்களுக்கு பிறகு தனது தாயை சந்தித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் மருத்துவமனையில் தங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சுகாதார பணியாளர்களின் கணவர்கள், மனைவிகள், தாய்கள், தந்தைகள், சகோதர, சகோதரிகள், வளர்ந்த குழந்தைகளுக்கு தெரியும் இவர்களின் பணி உன்னதமானது, நாடே நெருக்கடியை சந்தித்திருக்கும் நேரத்தில் இவர்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்திருப்பார்கள்.

பால் மனம் மாறாத குழந்தைகள்
ஆனால் விவரமே அறியாத பால் மனம் மாறாத குழந்தைகள்? என்ன தெரியும் அந்த குழந்தைகளுக்கு? இப்படி ஒரு சம்பவம் கர்நாடகம் மாநிலம் பெலகாவியில் நடந்தது. ஆம் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு மருத்துவமனையில் பால்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தா. இவர் கணேஷ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.

நபர்கள்
இவர் கோவிட் 19 வார்டில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் அந்த மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் சுகந்தாவும் தனிமைப்படுத்தப்பட்டார். அவரை காணாத 3 வயது குழந்தை தந்தையிடம் தொல்லை செய்து மருத்துவமனை வாசலுக்கு வந்தது.

சம்பவம்
அப்போது தூரத்திலிருந்து குழந்தையை பார்த்த சுகந்தா, உணர்ச்சிவயப்பட்டார். குழந்தையோ வண்டியிலிருந்து இறங்கி ஓடிவரத் துடித்தது. எனினும் தந்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அப்போது அந்த குழந்தை அம்மா வீட்டுக்கு வா போகலாம் என அழுதது. பதிலுக்கு சுகந்தாவும் அழுதார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

நெகிழ்ச்சி
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தவுடன் 21 நாட்களுக்கு பிறகு சுகந்தா வீடு திரும்பினார். அப்போது அவரை பார்த்த குழந்தை வாரி கட்டி அணைத்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மாறி மாறி அழுத சம்பவம் காண்போரையும் கண் கலங்க வைத்தது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications