உலக நன்மைக்காக என்ற பெயரில் சிறுமியை எரிக்க திட்டமிட்ட போலிச் சாமியார்
பெல்காம்: கர்நாடகாவில் உலக நன்மைக்காக என்ற பெயரில் 7 வயது சிறுமியை எரிக்க திட்டமிட்ட அப்பய்யசாமி என்ற போலிச் சாமியாரை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், அதானி தாலுகாவில் உள்ள ஜன்ஜர்வாட் கிராமத்தில் உள்ளது சந்திரம்மா தேவி மடம். இந்த மடத்தின் நிறுவனர் சாதசிவ் என்ற அப்பய்யசாமி. அவர் பகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகளான தம்பதியின் 7 வயது மகளை தத்தெடுத்தார். அந்த சிறுமியை தனது மடத்தில் உள்ள சிறிய அறையில் அடைத்து வைத்திருந்தார்.
உலக நன்மைக்காக சிறுமியை எரிக்கப் போவதாக அவர் கடந்த 6ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். அவர் சிறுமியை சாம்பலில் தூங்க வைத்துள்ளார். அவர் சிறுமியை எரித்த பிறகு அவர் இன்று கடவுளாக உயிர்பிக்கப்படுவார் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து அறிந்த போலீசார் நேற்று மடத்திற்கு சென்று சாமியாரையும், அவரது உதவியாளர் குருபத்கவுடா பாட்டீல் ஆகியோரையும் கைது செய்தனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமி அந்த அறையில் கடந்த 21 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் தப்பித்து சென்றுவிட்டனர்.
சிறுமி தவிர்த்து அந்த மடத்தில் இருந்த ராதிகா(7), பிரஷாந்த்(10), சச்சின்(8), புருஷோத்தம்(8) மற்றும் கிரண்(8) ஆகிய குழந்தைகளும் மீட்கப்பட்டன.
இந்த சாமியார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தான் ஆண்மை அற்றவர் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications