புத்தாண்டு கொண்டாட்டம்: பெங்களூருவில் இன்று இரவு முதல் காலை வரை மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல தடை!
பெங்களூரு: குண்டுவெடிப்பு பதற்றம் நீங்காத நிலையில் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பெங்களூரு நகரின் மேம்பாலங்களில் இரவு முதல் காலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சர்ச் சாலையில் குண்டுவெடித்ததில் சென்னையைச் சேர்ந்த பவானி என்பவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகளை பெங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நீடித்து வருகிறது. இதனால் பெங்களூரு நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பெங்களூருவின் எம்.ஜி. சாலை, பிரிகேட் சாலை ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட இருக்கிறது. அண்மையில் மைசூரு தசாரா கொண்டாட்டங்களின் போதும் இத்தகைய ஆளில்லா ரிமோட் விமானம் பயன்படுத்தப்பட்டது.

பெங்களூரு நகரில் மொத்தம் 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஜி. சாலையை சுற்றி 10 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கமர்சியல் தெரு, இந்திரா நகர் பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கண்காணிப்பு கோபுரத்திலும் 2 போலீசார் சக்திவாய்ந்த பைனாகுலருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 75 சிசிடிவி கேமராக்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கண்காணிக்க பெங்களூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பெங்களூரு நகர மேம்பாலங்களில் இரவு 7 முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய சாலை தவிர இதர மேம்பாலங்களில் கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications